அடேங்கப்பா! ஓடும் பஸ்ஸில் கண்டகர் மூலம் பணப்பட்டுவாடா.. அசரவைக்கும் ஆர்கே நகர்!
இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகர் தொகுதிக்குட்ட தண்டையார்பேட்டையில் ஓடும் பஸ்சில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பேருந்தை பறிமுதல் செய்து நடத்துனரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை: பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல். தண்ணீர் போல பணத்தை வாரி அரசியல் கட்சிகள் இறைத்து வருகின்றன.
ஜெயலலிதா போட்டியிட்டதால் நட்சத்திர தொகுதியான ஆர்.கே. நகர், தற்போது பணப்பட்டுவாடா புகாரின் பேரின் மேலும் ஜொலித்து வருகிறது.
இந்தப் புகாரில் அதிகம் சிக்கி வருவது அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன்தான். அவரது ஆதரவாளர்கள்தான் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓடும் பஸ்சில் பணப்பட்டுவாடா
இந்நிலையில், நேற்று இரவு தண்டையார் பேட்டைக்கு சென்று வரும் பேருந்தில் பணப்பட்டுவாடா செய்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 44சி என்ற வழித்தடம் கொண்ட பேருந்தின் நடத்துனர்தான் இந்த வேலையை செய்துள்ளார். இதனை அறிந்த திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

2 லட்சம் ரூபாய்
இந்த புகாரின் அடிப்படையில் நடத்துனர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் இருந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 லட்சம் அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பேருந்தும் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை
இதுதொடர்பாக, நடத்துனர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறக்கும் படை
இதேபோன்று ஆர். கே. நகர் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. பணப்பட்டுவாடா குறித்து திமுக உள்ளிட்ட பிற கட்சியினர் புகார் அளித்தாலும் பயன் ஏதும் இல்லை என்கின்றனர் தொகுதிவாசிகள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications