கல்லணையில் விவசாய சங்கங்கள், திரை நட்சத்திரங்கள் இணைந்து காவிரிக்காக "உறுதி ஏற்பு" ஒன்று கூடல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி கல்லணையில் உறுதி ஏற்பு ஒன்று கூடல் நடத்தப்பட்டது.
Recommended Video

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி கல்லணையில் உறுதி ஏற்பு ஒன்று கூடல் நடத்தப்பட்டது. இதில் விவசாய சங்கங்கள், திரைநட்சத்திரங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த பிரச்சனையில் மத்திய அரசு துரோகம் செய்ததாக கூறி விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் காவிரி பிரச்சனைக்காக கல்லணையும் போராட்ட களமாக மாறியுள்ளது. தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினர், டெல்டா விவசாயிகள் கல்லணையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திரை நட்சத்திரங்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்
#CauveryProtest
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) April 27, 2018
இந்திய அரசே!
காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு!
தமிழ்நாடு அரசே!
காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய்!
காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு!
கல்லணையில் உறுதி ஏற்பு ஒன்று கூடல்!#சீமான் pic.twitter.com/68Vzg8Hcpl
இந்த போராட்டத்தை உறுதி ஏற்பு ஒன்று கூடலாக நடத்தினர். இதில் ''இந்திய அரசே,காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு. தமிழ்நாடு அரசே, காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய். காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு.'' என்று முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications