காவிரி விவகாரம்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஜெ. திடீர் ஆலோசனை #cauvery
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. கர்நாடகாவில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டங்களால் கர்நாடகா-தமிழக எல்லையில் பதட்டம் நிலவியது. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு சென்ற 451 பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகர், மின்சார வாரியத் தலைவர் சாய்குமார், அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பிற்பகல் 1 மணிக்கு துவங்கிய ஆலோசனை கூட்டம் ஒரு மணிநேரமாக நடந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, இரு மாநிலங்களில் நிலவும் சூழல், பதட்டத்தை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications