காவிரியில் நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு... வேகமாக நிரம்புகிறது மேட்டூர் அணை
காவிரியில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து இருக்கிறது.
Recommended Video

சேலம்: காவிரியில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து இருக்கிறது. தற்போது மேட்டூருக்கு நீர்வரத்து 64,091 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை அதிகரித்து இருக்கிறது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.

தமிழகத்தில் பல வருடங்களுக்கு பின் காவிரியில் நீர் கரைபுரண்டு கடைமடை வரை வந்து இருக்கிறது. கடந்த 19ம் தேதியே மேட்டூரில் இருந்து விவசாய பாசனத்திற்கு அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த வாரம்தான் பல வருடங்களுக்கு பின் மேட்டூர் அணை நிரம்பிவிட்டது.
தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 48,065 கனஅடியில் இருந்து 64,091 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120.31 அடி, நீர் இருப்பு 93.96 டிஎம்சியாக
மேட்டூர் அணையில் நீர்திறப்பு 60,574 கனஅடியாக உள்ளது . இந்த தண்ணீர்வரத்து காரணமாக கல்லணையும் நிறைந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications