சென்னையில் இருந்து வழக்கம் போல் இயங்கிய கர்நாடக அரசுப் பேருந்துகள் #cauvery

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து கர்நாடக அரசு பேருந்துகள் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் இயங்கின.

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநிலத்தில் போராட்டம் நடந்து வருவதால் தமிழகத்தில் இருந்து அங்கு செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து கர்நாடகாவுக்கு கிளம்பிய கர்நாடக அரசு பேருந்துகள் நேற்று வழக்கம் போன்று இயக்கப்பட்டன. கோயம்பேட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Cauvery protests: KSRTC bus service from Chennai uninterrupted

கர்நாடகாவுக்கு சென்ற தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூரோடு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில்,

சென்னை கோயம்பேட்டில் இருந்து பெங்களூர், மைசூர், பெல்லாரி, கோலார், தர்மசாலா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி கோயம்பேட்டில் இருந்து கிளம்பிய கர்நாடக அரசுப் பேருந்துகள் எந்த பிரச்சனையும் இன்றி இயக்கப்பட்டுள்ளன.

கர்நாடகா-தமிழக எல்லையில் போராட்டம் நடந்து வரும் நிலையிலும் எங்களின் பேருந்துகள் வழக்கம் போன்று இயங்குகின்றன. செய்திகளை பார்த்து மக்கள் கர்நாடகாவுக்கு செல்ல தயங்குகிறார்கள். அதனால் பேருந்துகளில் கூட்டம் இல்லை.

கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக டிக்கெட் முன்பதிவு மையம் மற்றும் எங்கள் பேருந்துகள் நிற்கும் இடம் ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+