திருச்சியில் பொங்காத காவிரி... வாட்டர்கேனில் நடந்த ஆடிப்பெருக்கு - வீடியோ
திருச்சியில் காவிரி ஆறு வறண்டு போனதால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. வாட்டர்கேனில் தண்ணீர் கொண்டு வந்து ஆடிப்பெருக்கு கொண்டாடினர்.
திருச்சி: காவிரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனதால் நடப்பாண்டு ஆடிப்பெருக்கு விழா களையிழந்து போனது. வறண்டு கிடந்த காவிரி ஆற்றின் மணலில் படையலிட்டு வழிபட்டனர்.
தமிழகத்தின் காவிரி நதி ஓடும் சேலம்,ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும்.

ஆற்றங்கரையில் வாழை இலையில் தேங்காய், பழங்கள், பூ, காதோலை கருகமணி வைத்து பூஜை செய்து காவிரி நீர் பெருக்கெடுத்து ஓட வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என வழிபாடு நடத்துவார்கள்.
மேலும், சுமங்கலிப் பெண்கள் அன்று தாலியை மாற்றி புதுதாலிக் கயிறு அணிந்துகொள்வார்கள். புதிதாகத் திருமணம் ஆனவர்கள் காவிரிக் கரையினில் தாலி பெருக்கிக் கட்டிக்கொள்வார்கள். ஆகையால் குடும்பம் குடும்பமாக வந்து காவிரி ஆற்றில் கூடி வழிபாடு நடத்தி மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் சரிவர திறந்து விடப்படாத காரணத்தால், ஆடிப்பெருக்கு விழா பொழிவு இழந்து காணப்படுகிறது. மேட்டுர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட குறைந்தளவு நீர், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை வந்தடையாத காரணத்தால் ஆடிப் பெருக்கு விழாவில் பெண்கள் சம்பிரதாயமாகச் செய்யும் தாலியை ஆற்றில் விட்டு, புதுதாலிக் கட்டிக்கொள்ளும் நிகழ்வில் ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் வெறும் மணலில் தாலியை விட்டுச் சென்ற அவலம் நிகழ்ந்தது.
திருச்சி அம்மா மண்டபம், கல்லணை, முக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் நீர் இல்லாத காரணத்தால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. மக்கள் பெரிய வாட்டர் கேன்களில் தண்ணீரைச் சுமந்து சென்று காவிரிக் கரையில் வைத்து வழிபாடு நடத்தினர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications