நிர்மலா தேவி பின்னணியில் யார்... சிசிடிவி காட்சிகளை ஆராயும் சிபிசிஐடி!- சிக்கப்போவது யார்?
பேராசிரியை நிர்மலா தேவியின் தொடக்கப்புள்ளியை தேடும் சிபிசிஐடி அதிகாரிகள், ஒருவருட சிசிடிவி காட்சிகளை ஆராய திட்டமிட்டுள்ளனர்.
மதுரை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஒரு வருடத்திற்கான சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புத்தாக்க பயிற்சிக்காக சென்றிருந்த போது உயர் அதிகாரிகள் மூலம் மாணவிகளுக்கு 'ஆப்பர்சூனிட்டி' கிடைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்த முயன்றார்.

இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் இதில் தொடர்புடைய கறுப்பு ஆடுகள் அனைத்தும் களையெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நிர்மலாதேவியை கடந்த 4 நாட்களாகவே துருவி துருவி விசாரித்து வருகின்றனர் சிபிசிஐடி போலீசார். தனக்கு தெரிந்த விபரங்களை கூறி வருகிறார். அவர் கூறிய விபரங்கள் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர் சிபிசிஐடி அதிகாரிகள்.
பிராக்டிகல் மதிப்பெண் அச்சத்தில் இருந்த மாணவிகளை, தங்கள் பக்கம் கொண்டு வருவதில் படு கில்லாடியாக செயல்பட்டுள்ளார் நிர்மலா தேவி. இவர்களின் தொடர் டார்ச்சர்களால் ஏராளமான மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலியல் தொந்தரவு தாங்காத சிலர் கல்லூரியில் இருந்து டி.சி வாங்கிக் கொண்டு வெளியேறிவிட்டனர். சிலர் நிர்வாகத்தின் கவனத்துக்கும் புகார்களைக் கொண்டு சென்றனர். அவர்களை மிக எளிதாக சரிக்கட்டிவிட்டனர் இந்தப் பேராசிரியர்கள். விருப்பமிருந்தால்தான் அனைத்தும், இதனால் எங்களுக்கு எந்தவித நஷ்டமுமில்லை என வெளிப்படையாகவே பலரை மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவங்களின் பின்னணியில் நிர்மலா பணிபுரியும் கல்லூரி நிர்வாகிகள், காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என அனைவரையும் வளையத்தில் கொண்டு வந்தால்தான், பாலியல் வலையின் மூலத்தை அறிய முடியும் என்பதால் கடந்த ஒரு வருடமாகவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த போது அவரை பார்க்க வந்தவர்கள் யார் யார் என்று சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
விருந்தினர் மாளிகையின் சிசிடிவி காட்சிகளை ஆராயும் சிபிசிஐடி அதிகாரிகள், புத்தாக்க பயிற்சிக்காக நிர்மலா தங்கி இருந்த விடுதியிலும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். ஆடியோ லீக் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள ஆராய்ச்சி மாணவரும் பேராசிரியருமான கருப்பசாமி நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் நிர்மலா தேவி சொன்ன இரண்டு பெயர்கள், முருகன், கருப்பசாமிதான். இதில் முருகன் சிக்கிய நிலையில் கருப்பசாமி தலைமறைவாக இருக்கிறார். இதனையடுத்து அவரது சொந்த ஊரில்
கருப்பசாமியின் நெருங்கிய நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் கருப்பசாமி நண்பர்கள் அண்ணாதுரை மற்றும் முனீஸ்வரனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு வருட சிசிடிவி காட்சிகளை ஆராயும் பட்சத்தில் எந்தெந்த முதலைகள் சிக்குமோ? பெருந்தலைகள் பலரது தலைகள் உருளுமோ என்று தெரியவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications