டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு: காவல்துறை அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை
நாமக்கல்: டிஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக, ராசிபுரம் டி.எஸ்.பி. ராஜு, உள்ளிட்ட நாமக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் ராசிபுரம் டி.எஸ்.பி. ராஜு, பள்ளிப்பாளையம் ஆய்வாளராக செயல்பட்டு தற்போது நாமக்கல் தனிப்பிரிவு ஆய்வாளராக உள்ள ராஜ், திருச்செங்கோடு எஸ்.ஐ. சந்திரகலா, காவலர் கெளரிசங்கர் ஆகியோரை நேற்று நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சிபிசிஐடி டி.எஸ்.பி ராஜன் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது டி.எஸ்.பி தற்கொலை செய்து கொண்டவுடன் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்றது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக 4 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications