177 கிலோ தங்கம்: போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியிடம் 5-வது நாளாக விசாரணை!
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 5-வது நாளாக இந்த விசாரணை தொடருகிறது.
சென்னை: போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டியிடம் 5-வது நாளாக கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் பல்லாயிரம் கோடி ரூபாய் கான்டிராக்ட் பணிகளை செய்து வருகிறார் சேகர் ரெட்டி. சேகர் ரெட்டிக்கு சொந்தமான வீடு, அலுலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் ரொக்கமாக ரூ190 கோடி, ரகசிய அறைகளில் பதுக்கப்பட்ட 177 கிலோ தங்கம் சிக்கியது. இதில் ரூ100 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேகர் ரெட்டி மீது அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேகர் ரெட்டியிடம் தொடர்ந்து 5-வது நாளாக வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட உள்ளார்.
சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்னம் மற்றும் புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.