20 தமிழர் படுகொலை: சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னையில் 28-ல் பேரணி-வைகோ, திருமா, வேல்முருகன் அறிவிப்பு!
சென்னை: ஆந்திராவால் 20 தமிழர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி சென்னையில் 28-ந் தேதி பேரணி நடத்தப்படும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
20 தமிழர் படுகொலை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 150க்கும் மேற்பட்ட கட்சிகள், அரசியல் இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ, திருமாளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் 20 தமிழர் படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் 28-ந் தேதி பேரணி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை செய்தியாளர்களிடம் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை வரை இந்த பேரணி நடத்தப்பட உள்ளது.

இப்பேரணியின் முடிவில் 20 தமிழர் படுகொலைக்கு நீதி விசாரணை தேவை என்றும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆளுநர் ரோசைய்யாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications