ராமஜெயம் கொலை வழக்கு: சிபிசிஐடியின் 9வது ரகசிய அறிக்கை தாக்கல் - ஒத்திவைப்பு
மதுரை: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 9வது ரகசிய அறிக்கையை சிபிசிஐடி போலீசார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் திங்கட்கிழமையன்று தாக்கல் செய்தனர். இதனையடுத்து வழக்கு நாளை அக்டோபர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ராமஜெயம் கடந்த 29.3.2012-ம் தேதி திருச்சியில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலை நடந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை.

இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி ராம ஜெயத்தின் மனைவி லதா, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் உயர் நீதிமன்ற கிளையில் இதுவரை 8 ரகசிய அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர்.
ரகசிய அறிக்கை
ஒவ்வொரு முறையும் சிபிசிஐடி சார்பில், 'ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணையின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும், அவர்களை கைது செய்ய மேலும் அவகாசம் வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டு கால அவகாசம் கோரப்பட்டது.
நீதிமன்றம் கெடு
ராமஜெயம் கொலை வழக்கு கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி 2 மாத கால அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்தார். கொலையாளிகளை அக்டோபர்17ம் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் இறுதிக்கெடு விதித்து நீதிபதி உத்தரவிட்டார். எனினும் வழக்கு விசாரணை வழக்கம் போலவே நடைபெற்றது.
ஒத்திவைப்பு
இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அக்டோபர் 17ம் தேதி திங்கட்கிழமை நீதிபதி பஷீர்அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் 9வது முறையாக விசாரணையின் ரகசிய அறிக்கையை சீலிடப்பட்ட கவரின் போட்டு தாக்கல் செய்தனர். அதனை படித்து பார்க்க வேண்டியது இருப்பதால் விசாரணையை புதன்கிழமை அக்டோபர் 19ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமா?
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நான்கரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுநாள்வரை குற்றவாளியின் நிழலைக்கூட சிபிசிஐடி போலீசார் நெருங்கவில்லை. ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிடுவாரா? அல்லது வழக்கம் போல சிபிசிஐடிக்கு அவகாசம் வழங்குவாரா? நாளை தெரியும்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications