கடன் மோசடி புகார்.. சென்னையில் உள்ள 5 இடங்களில் சிபிஐ திடீர் சோதனை
சென்னையில் உள்ள 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
எஸ்எல்ஓ இன்டஸ்ட்ரீஸ், ஆரன் ஸ்டீல்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் பல்வேறு கார்ப்பரேஷன் வங்கிகளில் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக புகார் உள்ளது. இது தொடர்பான விசாரணையில் இன்று சிபிஐ சோதனை நடத்தி இருக்கிறது.

கார்ப்பரேஷன் வங்கியில் 201 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ இந்த நிறுவனங்களின் மீது வழக்கு பதிந்துள்ளது. கடன் பெற்று திருப்பி தராத வழக்கில் சோதனை நடக்கிறது.
சென்னையில் உள்ள 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். எஸ்எல்ஓ இன்டஸ்ட்ரீஸ், ஆரன் ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவன கிளைகளில் சோதனை நடக்கிறது.












Click it and Unblock the Notifications