கன்னியாகுமரியில் மாணவிகள் உடைமாற்றும் அறையில் கண்காணிப்பு கேமரா- கலெக்டரிடம் புகார்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் விடுதியிலுள்ள உடைமாற்றும் அறையில் கண்காணிப்பு கேமரா வைத்துள்ளதாக, மாணவி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தாசையா நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமாக மாணவிகள் விடுதியும் உள்ளது. கல்லூரி விடுதிக்குள் கழிவறை மற்றும் மாணவிகள் உடைமாற்றும் அறையில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து முறையான பதில் வரவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற சென்ற செய்தியாளர்கள் மீது கல்லூரி நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து கல்லூரி சேர்மன் தாசையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.