இறைச்சிக்காக மாடு விற்பனைக்கு தடை... உள்நாட்டு போரை உருவாக்கும் - தொல். திருமா கண்டனம்
இறைச்சிக்காக மாட்டை விற்பதோ, வாங்குவதோ கூடாது என மத்திய அரசு விதித்துள்ள தடை ஆபத்தானது. மத்திய அரசு நிந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமா கூறியுள்ளார்.
சென்னை: இறைச்சிக்காக மாட்டை விற்கவும் வாங்கவும் மத்திய அரசு விதித்துள்ள தடை ஆபத்தானது. அது உள்நாட்டுப் போரை உருவாக்கும். இதை எதிர்த்து ஜூன் 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மாடுகளை இறைச்சிக்காக விறபனை செய்வதற்கு காட்ந்தவாரம் தடை விதித்தது. தனைக் கண்டித்து கேரள முதல்வர் கருத்துக் கூறினார். அதுமட்டுமில்லாமல் கேரளா மற்றும் திரிபுரா மாட்டிறைச்சித் திருவிழா நடத்தப்பட்டது. ஆனால் தமிழக முதல்வர் அதுகுறித்து எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

மாட்டுறைச்சி தடை குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது: இறைச்சிக்காக மாட்டை விற்கவும் வாங்கவும் விதித்துள்ள தடை, உள்நாட்டுப் போரை உருவாக்கும். இது ஒரு ஆபத்தான அறிவிப்பு. அதுவும் ரம்ஜான் நோன்பு காலத்தில் ஒட்டகங்களுக்குத் தடை என கூறியிருப்பது சமூக உறவுகளை பாதிக்கும் வகையில் இருக்கிறது.
மேலும், இது விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கும். மத்திய அரசு இந்த தடையை திரும்பப் பெற வேண்டும். அப்படி பெறவில்லையெனில் ஜூன் 2ஆம் தேதி இந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் போராட்டம் நடத்தப்படும்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications