ஜெ. பதவியேற்பு விழாவில் பாஜக சார்பில் பொன். ரா, எச்.ராஜா, இல.கணேசன் பங்கேற்பு!
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற ஜெயலலிதா மற்றும் தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ.யாகவும், முதல்வராகவும் பதவி வகிப்பதற்கான தடை நீங்கியது.

இதனால், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. தமிழகத்தின் புதிய முதல்வராக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்றார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் தமிழக முதல்வராக ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதாவை தொடர்ந்து அமைச்சர்கள் 14, 14 பேராக இரண்டு குழுக்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழா நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அதேபோல், பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, இல. கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications