பாலியல் வன்முறை இழப்பீடுக்கு ரூ.200 கோடி நிதி!
டெல்லி: பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமில வீச்சு, பாலியல் வன்முறை, கடத்தல் ஆகிய குற்றங்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தில் முதல்கட்டமாக ரூ.200 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி, மேற்கூறிய குற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்க மாநில அரசுகள் உருவாக்கியுள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும்.
இந்தக் குற்றங்களில் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், ஊனமடைந்தவர்கள் என அனைவருக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications