தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் மூடல்- பாஜக அரசால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவில்!
தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்படுவதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து மத்திய அரசு நிறுவனங்களை ஈவிரக்கமில்லாமல் பாஜக அரசு மூடி வருவதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
நாடு விடுதலை அடைந்த காலங்களில் மத்திய அரசின் பல நிறுவனங்கள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிறுவப்பட்டன. அதன்பின்னரும் மத்திய அரசு நிறுவனங்களை அமைக்க தமிழகம் போராடி வந்துள்ளது.

கோவை அச்சகம்
இப்படி 50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தமிழகத்தில் இயங்கி வரும் பல நிறுவனங்களை திடீர் திடீரென மத்திய அரசு மூடுவது அதிகரித்துள்ளது. கோவையில் இயங்கி வந்த மத்திய அரசின் அச்சகம் அண்மையில் மூடப்பட்டது.

திருச்சி, சென்னை நிறுவனங்கள் மூடல்
அதேபோல் கோவை கரும்பு ஆராய்ச்சி நிலையம், திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம், சென்னையில் உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றையும் மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் சென்னையை அடுத்த ஆவடியில் 56 ஆண்டுகாலம் இயங்கி வந்த ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையையும் மூட இருக்கிறது மத்திய அரசு.

வெளிமாநிலத்தவர் ஆதிக்கம்
அத்துடன் தமிழர்களின் நிலத்தில் தமிழர்களின் உழைப்பால் உருவான என்.எல்.சி நிறுவனம் தமது லாபத்தை தொழிலாளர்களின் நலனுக்கோ தமிழகத்துக்கோ செலவிடாமல் வட இந்தியாவில் புதிய யூனிட்டுகளை திறந்து வருகிறது. என்.எல்.சியில் வட இந்திய அதிகாரிகள், தொழிலாளர்களே அதிகரித்தும் வருகின்றனர். ஆனால் அங்கு கால் நூற்றாண்டுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நிலங்களை கொடுத்தவர்களுக்கும் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை.

மத்திய அரசு வஞ்சகம்
மத்திய அரசின் இத்தகைய வஞ்சகத்தால் ஆயிரக்கணக்கான தமிழர் குடும்பங்கள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு விரோதமான அத்தனை திட்டங்களையும் மத்திய அரசு திணித்துக் கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில் தமிழர்களின் வாழ்வாதாரமான திட்டங்கள், நிறுவனங்களை பறித்துக் கொண்டிருப்பது மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிற ஒன்றாகவே இருக்கிறது. பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கும் தமிழகத்தை இப்போது மத்திய அரசு நடவடிக்கைகள் கொந்தளிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications