போயஸ் கார்டனில் விவேக் நடத்திய 'ரகசிய கூட்டம்' இதற்குதானாம்!

போயஸ் கார்டனில் விவேக் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் பங்களாவில் விவேக் திடீரென ஒரு ரகசிய கூட்டத்தை கூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் பேச்சுவார்த்தைக்கு தீவிரம் காட்டின. ஆனால் இந்த பேச்சுவார்த்தையே நடக்காமல் போய்விட்டது.

இதற்கு மிக முக்கிய காரணமே ஜெயா டிவியும் நமது எம்ஜிஆர் நாளேடும்தான். இந்த இரண்டும் விவேக் வசம் உள்ளது. அதனால் சசிகலா, தினகரன் புகழ்பாடுவதிலேயே குறியாக இருக்கின்றன ஜெயாடிவியும் நமது எம்ஜிஆரும்.

ஓபிஎஸ் தரப்பு கோபம்

ஓபிஎஸ் தரப்பு கோபம்

இதனால் சசிகலா குடும்பத்தையே ஒதுக்கி வைக்க வேண்டும் என்கிற ஓபிஎஸ் தரப்பு உச்சகட்ட கோபம் கொண்டது. அதேநேரத்தில் மத்திய பாஜக அரசையும் ஜெயா டிவியும் நமது எம்ஜிஆரும் கடுமையாக விமர்சித்தது.

மிரட்டிய டெல்லி

மிரட்டிய டெல்லி

இதனால் டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அப்போதுதான் 2 மாதத்தில் ரூ380 கோடி கல்லா கட்டிய விவகாரத்தை சுட்டிக்காட்டியது டெல்லி.

எடப்பாடி அட்வைஸ்

எடப்பாடி அட்வைஸ்

இதையடுத்து மத்திய அரசை விமர்சிக்காமல் இருங்க.. என விவேக்குக்கு கடும் அட்வைஸ் கொடுத்திருக்கிறார் எடப்பாடியார். இந்த உத்தரவை மீறினால் நீங்களும் தினகரன் போல சிக்குவீங்க எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ரகசிய கூட்டம்

ரகசிய கூட்டம்

இதன்பின்னர்தான் ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆர் நாளேடு நிர்வாகிகளை போயஸ் கார்டன் பங்களாவுக்கு அழைத்திருக்கிறார் விவேக். தமக்கு இருக்கும் நெருக்கடியை சுட்டிக்காட்டி அடக்கி வாசிக்கலாம் என முடிவு செய்தார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+