தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த வெள்ளியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப் பட்டன.
அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லோக்சபாதேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன' என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications