ஆட்டோவில் வந்த பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் 10 பவுன் செயின் கொள்ளை - கைவரிசையை காட்டிய திருடர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆட்டோவில் வந்த பெண் சப் இன்ஸ்பெக்டரிடமே செயினை அறுத்துச் சென்ற திருடர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அசோக் நகர் ராம கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் அனிதா.இவர் பாதுகாப்பு பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் இன்று காலையில் ஆட்டோவில் வந்து வீட்டு முன்பு இறங்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளிலில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் அனிதா கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்து சென்றனர்.

இதேபோன்று குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், சாய்நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவர் வீட்டு வசதி வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஊருக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி திருப்பதி வேலைக்கு சென்று விட்டார். அவரது மகன் மனோஜ் பள்ளிக்கு சென்று விட்டான். மனோஜ் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டுக் கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் பீரோவில் எதுவும் இல்லை என்பதால் கொள்ளை எதுவும் போகவில்லை. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+