காவிரி டெல்டா மாவட்டங்களில்
காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று 3-வது நாளாக மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், பாபநாசம், பூதலூர், திருவையாறு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், சுவாமிமலை, அதிராம்பட்டினம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் தூறல் மழை பெய்து வருகிறது.
நேற்று பெய்த மழை காரணமாக கும்பகோணம் அருகே உள்ள ஜெந்நாத பெருமாள் கோவில் கோபுரத்தில் உள்ள யாழி இடிந்து விழுந்தது.

திருவாரூர் - நாகை
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் மேகமூட்டமாக உள்ளது. திருவாரூர், குடவாசல், முத்துப்பேட்டை, நன்னிலம், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய இடங்களில் இன்று 3-வது நாளாக தூறல் மழை பெய்து வருகிறது.
நாகை மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், கீழையூர், சிக்கல், திருமருகல், திட்டச்சேரி, தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய இடங்களில் இன்றும் தூறல் மழை பெய்து வருகிறது.
சீர்காழியில் நேற்று காலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கொள்ளிடம், பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு, திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய இடங்களில் நேற்று இரவு மழை பெய்தது. தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழி பகுதியில் இன்றும் தூறல் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications