தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆராய்ச்சி மையம்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சனிக்கிழமையன்று தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது.

காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் 9 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதேபோல், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி, ஈரோடு மாவட்டம் தளவாடி ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 7 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, போளூர், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, பள்ளிப்பட்டு, வேலூர் மாவட்டம் ஆலங்காயம், காவேரிப்பாக்கம், திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
இந்நிலையில் வெப்பச்சலனம் நீடித்து வருகின்ற காரணத்தினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications