திருப்பதி தேவஸ்தான சென்னை கிளையில் நாயுடுகளுக்கு அதிக பதவி.. ஆந்திர முதல்வர் திட்டம்?
சென்னை: திருப்பதி-திருமலை தேவஸ்தானத்தின் சென்னை கிளையில் தனது ஜாதியினருக்கு முக்கியத்துவம் தந்து நிர்வாகிகளை நியமிக்க உள்ளாராம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. புது பட்டியல் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதியிலுள்ள ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. அக்கோயிலில் கூட்டம் அதிகரிப்பதால், பெரிய நகரங்களில், கோயில் கிளைகளை அமைத்துவருகிறது தேவஸ்தான டிரஸ்ட். இதன்படி, சென்னை டி.நகரிலும் திருப்பதி-திருமலை தேவஸ்தானக் கமிட்டியின் கிளை உள்ளது. அருகிலேயே வெங்கடாஜலபதி கோயிலும் உள்ளதால் பக்தர்கள் பெருமளவுக்கு இங்குவருகிறார்கள்.

இங்கிருந்தே, திருப்பதி கோவிலில் தரிசனம், தங்குமிடம் ஆகியவற்றுக்கு தேவையான ஏற்பாடுகளை முன்பதிவு செய்யவும் வசதியுள்ளது. இந்த சென்னை கிளையில் 22 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்களே அதிகம்.
நாயுடு சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஆந்திர முதல்வர் நாயுடு காதில் இதுகுறித்து கொளுத்தி போட்டுள்ளனர். எனவே, சென்னையில் உள்ள கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலை முழுவதுமாக மாற்றி அமைத்து, அதில் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களை பெரும்பான்மையாக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications