ம.தேமுதிக சந்திரகுமார், பார்த்திபன், சேகர், ரவீந்தரனுக்கு திமுகவில் பதவிகள் அறிவிப்பு #dmk
சென்னை: திமுகவில் இணைந்த மக்கள் தேமுதிக கட்சியின் நிர்வாகிகள் விசி சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன், சி.ஹெச். சேகர், கான்ஸ்டன்டைன் ரவீந்தரன் ஆகியோருக்கு திமுகவில் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டசபை தேர்தலின் போது தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிகவில் இருந்து வெளியேறி மக்கள் தேமுதிக உருவாக்கப்பட்டது.
பின்னர் மக்கள் தேமுதிக, திமுகவில் ஐக்கியமானது. தேமுதிகவின் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால் 3 பேரும் தேர்தலில் தோல்வி அடைந்தனர்.
இந்த நிலையில் திமுகவில் இணைந்த தேமுதிகவின் நிர்வாகிகள் பலருக்கும் இன்று பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திமுக கொள்கை பரப்பு இணைச் செயலராக விசி சந்திரகுமார், தேர்தல் பணிக்குழு செயலராக மேட்டூர் எஸ்.ஆர். பார்த்திபன், தீர்மானக் குழு உறுப்பினர்களாக சி.ஹெச். சேகர், செஞ்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஜயகாந்துக்கு அறிக்கை எழுதிக் கொடுத்த பேராசிரியர் கான்ஸடன்டைன் ரவீந்தரன், திமுக செய்தி தொடர்பு இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் திமுக விவசாய அணிச் செயலராக அப்துல் காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.