திருவாரூர் அருகே தேர் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி
திருவாரூர்: திருவாரூர் அருகே திருக்கரவாசலில் கோவில் தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பக்தர்கள் உயிரிழந்தனர்.
திருக்கரவாசல் தியாகராஜர் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது, இந்த தேரோட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது.
தேர் கவிழ்ந்ததனால் ஏற்பட்ட விபத்தில் சுந்தரம், முருகன் ஆகிய இருவர் தேருக்கு அடியில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். திருக்கரவாசல் தியாகராஜர் வழக்கமாக ஆண்டு தோறும் தேரோட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு தேரோட்டத்திற்காக தேர் முன்னதாகவே தயார் செய்யப்பட்டது.
ஆனாலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. மழையின் காரணமாக தேரின் சக்கரம் அடியில் மாட்டிக்கொண்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது என முதல்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது.