சென்னை விமான நிலையம்: துபாய் பெண் பயணியிடம் 10 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இரு வெவ்வேறு பயணிகளிடமிருந்து சுமார் 14 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
விமானம் வாயிலாக துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக இருக்கிறது. இதனால் சென்னை வந்திறங்கும் சந்தேகத்திற்குரிய பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தி இவ்வாறு கடத்தப்படும் தங்கத்தை மீட்டு வருகின்றனர்.
அந்தவகையில், துபாயில் இருந்து சென்னை வந்த பெண் பயணி விஜயலதாவிடமிருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த சித்திக் என்பவரிடம் இருந்து 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமான நிலைய கழிப்பறைப் பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் சுமார் 3.5கிலோ தங்கம் மீட்கப்பட்டது.
சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட இந்த 14 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அந்த பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications