சதத்தை நோக்கி...61-வது முறையாக உடைந்து விழுந்த சென்னை விமான நிலைய கண்ணாடி !
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்து விழுவது தொடர் கதையாகி உள்ளது. இன்று காலை பயணிகள் புறப்பாடு பகுதியில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை நடத்தும் அறை அருகில் உள்ள கண்ணாடி சுவர் பயங்கர சத்ததத்துடன் உடைந்து விழுந்தது.

இதனால் அங்கிருந்த பயணிகள் பயந்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுவரை 60 முறை கண்ணாடி விழுந்து உள்ளன. இந்நிலையில் இரவு விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் மீண்டும் கண்ணாடி உடைந்து விழுந்தது.
அந்த நேரத்தில் பயணிகள் யாரும் அருகில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை. 61-வது முறையாக விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்திருப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விமான நிலையங்களில் 3 ஆவது மிக பரபரப்பான விமான நிலையமாக உள்ள சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் குறித்து பல முறை பயணிகள் புகார் தெரிவித்தபோதும் இதுவரை அது குறித்து எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என பயணிகள் குமுறுகின்றனர். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications