For Daily Alerts
Just In
மீண்டும் மீண்டும் உடையும் சென்னை விமான நிலைய கண்ணாடி - 22 ஆவது விபத்து
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மீண்டும் ஏற்பட்ட விபத்தினால் பயணிகள் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை விமானநிலைய சர்வதேச முனையத்தின் பயணிகள் புறப்பாடு பகுதியின் 2 ஆவது தளத்தில், பயணிகளின் உடமைகள் சோதனை முடிந்து கன்வேயர் பெல்ட் மூலம் விமானத்துக்கு செல்லும் பகுதியில் சுமார் 40 அடி உயரத்தில் கண்ணாடி சுவர் உள்ளது.
இந்த சுவர் நேற்று மதியம் 3 மணிக்கு பயங்கர சத்தத்துடன் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக கீழே விழாமல் அந்தரத்தில் தொங்கியபடி கண்ணாடிகள் இருந்தது.
இதை பார்த்ததும், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், அலறியடித்து ஓடினர். சென்னை விமானநிலையத்தில் இது போன்ற விபத்து நடப்பது இத்துடன் 22ஆவது முறை என்பது குறிப்பிடத்தகதாகும்.
Comments
English summary
Chennai airport glass door was broken yesterday. This is the 22nd incident there.
Story first published: Wednesday, July 23, 2014, 15:06 [IST]