சென்னை கடற்கரையில் இருந்து டெல்லிக்கு இன்று சிறப்பு ரயில்
சென்னை: சென்னை கடற்கரை- டெல்லி இடையே சிறப்பு ரயில் இன்று இரவு 10 மணிக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கனமழையால் ரயில் தண்டவாளங்களில் வெள்ளநீர் தேங்கியதை அடுத்து ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்நிலையங்களில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரலில் இருந்து 100க்கும் மேலான ரயில்கள் கடந்த 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு டெல்லிக்கு சிறப்பு ரயில் (எண். 02621) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், இடார்சி, போபால், ஜன்சி, குவாலியர், ஆக்ரா மற்றும் நிஜாமுதீன் நிலையங்களில் நின்று செல்லும் என்று தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் கூறியுள்ளார்.
இதனிடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர் முழுமையாக வடியாத காரணத்தாலும், ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் இன்றுமுதல் டிசம்பர் 7ம் தேதிவரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.