குண்டு வெடிப்பு சென்னையை குறிவைத்து நடத்தப்பட்டதே: ரயில் கால அட்டவணையில் விடையுள்ளது
சென்னை: ரயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல் சென்னையை குறிவைத்து நடத்தப்பட்டதே என்பது குறிப்பிட்ட ரயிலின் கால அட்டவணையை பார்த்தாலே தெரியும்.
பெங்களூரிலிருந்து புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் குவகாத்திக்கு இயக்கப்படும் ரயிலில் (எண் 12509) குண்டு வெடித்துள்ளது. இந்த ரயில் இரவு 11.30 மணிக்கு பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
தமிழக டிஜிபி ராமானுஜம் சம்பவ இடத்தை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், காலை 5.40 மணிக்கு வரவேண்டிய ரயில் 7.20 மணிக்குதான் சென்னை சென்டிரல் வந்தது. சரியான நேரத்துக்கு ரயில் வந்திருந்தால் குண்டு வேறு எங்காவது வெடிக்க வாய்ப்பிருந்தது. ஆனால் இப்போதே அதுகுறித்து முழுமையாக தெரிவிக்க முடியாது என்றார்.

ரயிலின் கால அட்டவணைப்படி பார்த்தால் சென்னை சென்டிரலுக்கு 5.40 மணிக்கு வரும் ரயில் 6.20 மணிக்கு மீண்டும் புறப்படுகிறது. குண்டு வெடித்த 7.20 மணியளவில் எந்த ஒரு ரயில் நிலையத்திலும் அது நிற்கப்போவதில்லை. ஏனெனில் சென்னைக்கு அடுத்த நிறுத்தம் ஆந்திர மாநிலம் ஓங்கோல்தான். அதுவும் காலை 10.49 மணிக்குதான் சென்றடைகிறது. எனவே ஒங்கோலை குறிவைத்து தாக்குதல் நடத்த சதிகாரர்கள் திட்டமிட்டதாக நம்ப முடியாது.
சென்னையில் ரயில் பிளாட்பாரத்தில் வந்து நின்றபோது குண்டு வெடித்துள்ளது. காலதாமதம் ஆனாலும் சென்னை போன்ற முக்கிய நகரில் குண்டுவெடித்துள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது குண்டை வெடிக்க செய்தவன் சென்னையை குறிவைத்தே காத்திருந்து வெடிக்க செய்திருக்கலாம் என்று காவல்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
-
கிளாம்பாக்கத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications