சென்னை கேகே நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை
சென்னை கே கே நகரில் கல்லூரி வாசலில் மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னை கேகே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் படித்து வந்த மாணவியை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தினார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவியின் பெயர் அஸ்வினி என்பதாகும். மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இன்று மதியம் கல்லூரி முடிந்து தோழிகளுடன் வெளியே வந்தார்.
அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் மாணவி அஸ்வினியை மறித்து பேசினார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.

மாணவியை குத்திய மர்மநபர்
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அஸ்வினி மீது சராமாரியாக குத்தினான். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த மாணவி அஸ்வினி ரத்த வெள்ளத்தில் கிழே சாய்ந்தார். இந்த காட்சியை நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இளைஞருக்கு அடி உதை
எனினும் மாணவியை கொன்று விட்டு தப்ப முயன்ற அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விரட்டிய இளைஞர்
முதற்கட்ட விசாரணையில் மாணவியை குத்தியவன் பெயர் அழகேசன் என்று தெரியவந்துள்ளது. அஸ்வினியை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளான். ஏற்கனவே மதுரவாயல் காவல்நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

அஸ்வினி மரணம்
இதனிடையே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்வினி சிசிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். பட்டப்பகலிலே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் மாணவி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீனாட்சி கல்லூரி வாசலில் பதற்றம் அதிகரித்துள்ளது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒருதலைக்காதலால் அஸ்வினியை அழகேசன் கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications