சென்னை கிண்டியில் திரண்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள்... முடங்கிய போக்குவரத்தால் போலீஸ் திணறல்!
நீட் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி சென்னையின் பிரதான சாலையான கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது.
சென்னை : அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வுக்கு தடை கோரியும் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.
அரியலூரை மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்து போனதையடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவிற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஸ்தம்பிப்பு
கடந்த 3 நாட்களாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் லயோலா கல்லூரி, புதுக்கல்லூரி, சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நந்தனம் மாணவர்கள்
இந்நிலையில் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே நந்தனம் கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் சில மாணவர்களே திரண்ட நிலையில் திடீரென நூற்றுக்கணக்கான மாணவர்கள் மேம்பாலம் அருகே திரண்டதால் போக்குவரத்து முடங்கியது.

போக்குவரத்து முடங்கியது
மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட முயன்ற நிலையில், அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய முயற்சித்தனர். எனினும் ஏராளமான மாணவர்கள் குவிந்ததால் போக்குவரத்து உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. இதனால் புறநகர்ப் பகுதிகளில் இருந்து சென்னைக்குள் வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது.

மாணவர்கள் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று மாணவர்கள் விடாப்படியாக இருந்ததால் போலீசார் திணறினர். இதையடுத்து மாணவர்களை கைது செய்து போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications