முகத்தில் வர்ணம் பூசி.. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்து சொன்ன கல்லூரி மாணவிகள்
சென்னை: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை அண்ணா நகர் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் இந்திய வரைபடம் மற்றும் ஒலிம்பிக் சின்னத்தை முகத்தில் வரைந்து வாழ்த்து தெரிவித்தனர்.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நாளை முதல் 21ம் தேதி வரை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 207 நாடுகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான துவக்க விழா பாரம்பரிய மரக்கானா மைதானத்தில் இந்திய நேரப்படி ஆகஸ்ட் 6, அதிகாலை 4.30 மணியளவில் துவங்குகிறது. ஒலிம்பிக் போட்டிக்காக மாற்றியமைக்கப்பட்ட இம் மைதானத்தில் சுமார் 78,000 பேர் உட்கார்ந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாளை துவங்கும் 31வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 121 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் விளையாடுகின்றனர். தமிழகத்தில் இருந்து 6 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்து திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை அண்ணா நகர் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் இந்திய வரைபடம் மற்றும் ஒலிம்பிக் சின்னத்தை முகத்தில் வரைந்து வாழ்த்து தெரிவித்தனர்.
-
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications