நட்சத்திர கிரிக்கெட் நடத்தியதில் முறைகேடு.. வராகி புகாரை விசாரிக்கப்போகிறது குற்றப்பிரிவு போலீஸ்
நடிகர் சங்க கிரிக்கெட் முறைகேடு பற்றி சென்னை குற்றப்பிரிவு காவல்துறை விசாரிக்க உள்ளதாம்.
சென்னை: தென்இந்திய நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டில் முறைகேடு நடந்துள்ளதாக வராகி என்பவர் அளித்த புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரிக்க உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திர கிரிக்கெட் நடத்தியதில் சுமார் 6 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக நடிகரும், பத்திரிக்கையாளருமான வாராகி என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும்,சென்னை போலீஸ் கமிஷனரிடமும் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்தார்.
இது சம்பந்தமாக தேனாம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து நடிகர்கள் நாசர்,விஷால்,கார்த்திக் மற்றுமுள்ள சில நிர்வாகிகளுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பபட்டது. மேற்படி நபர்கள் விசாரனைக்கு ஆஜர் ஆகாததால் மேற்படி புகார் சென்னை மத்திய குற்ற பிரிவிற்கு விசாரிக்க மாற்றப்பட்டுள்ளது.