பிரபல ரவுடி “கொடுங்கையூர் முட்டை ரவி” துப்பாக்கி முனையில் கைது
சென்னை: கொடுங்கையூரை கலக்கிய ரவுடி முட்டை கோபி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொடுங்கையூரை கலக்கிய ரவுடி முட்டை கோபியை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.சென்னை மணலி, சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி என்ற "முட்டை" கோபி. பிரபல ரவுடியான இவர் சென்னை கொடுங்கையூர், மாதவரம் போன்ற பகுதிகளில் கடும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தார்.
கொலை, கொள்ளை, கொலைமுயற்சி, மாமூல் வசூல் என்று பயங்கரமாக கலக்கி வந்தார். 3 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றுள்ளார். இவர் மீது 15 வழக்குகள் உள்ளது.
கொடுங்கையூரைச் சேர்ந்த சரவணன் என்பவரை கொலை செய்த வழக்கு இவர் மீது உள்ளது. இவரை கைது செய்யும்படி கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், கமல்மோகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ரவுடி முட்டை கோபியை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் கொடுங்கையூரில் மோட்டார்சைக்கிளில் வந்த முட்டைகோபியை மடக்கினார்கள். அவர் போலீசாரை பார்த்ததும் அரிவாளை தூக்கினார். பதிலுக்கு போலீசார் துப்பாக்கியை தூக்கினார்கள். இதனால் முட்டைகோபி போலீசாரிடம் சரண் அடைந்துவிட்டார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தனக்கு எதிரியான இன்னொரு ரவுடியை தீர்த்துக்கட்ட ரவுடி முட்டை கோபி சதித்திட்டம் தீட்டி செயல்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. "ரவுடிகள் வேட்டை தொடரும்" என்று போலீசார் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications