வாக்களிக்க லீவு விடாத டிசிஎஸ், ஹெச்.சி.எல், விப்ரோ, டெக் மகேந்திரா மீது வழக்கு
சென்னை: சென்னையில், வாக்குப்பதிவு நாளன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத டிசிஎஸ், ஹெச்.சி.எல், விப்ரோ, டெக் மகேந்திரா உள்ளிட்ட 10 ஐ.டி. நிறுவனங்கள் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நாளன்று அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

5 ஐடி நிறுவனங்கள்
இதற்கிடையே, சோழிங்கநல்லூர் மேடவாக்கம் இணைப்புச் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள ஹெச்.சி.எல், விப்ரோ, டெக் மகேந்திரா, வோல்டாஸ், சொடெக்ஸோ ஆகிய 5 நிறுவனங்கள் இயங்குவதாக தேர்தல் ஆணையத்துக்குப் புகார்கள் வந்தன.

அதிரடி சோதனை
அந்தப் புகாரின் அடிப்படையில் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் ஆர். ஜெயந்தி மற்றும் போலீஸார் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அந்த 5 நிறுவனங்கள் இயங்குவது தெரியவந்தது.

ஊழியர்கள் வெளியேற்றம்
இதனையடுத்து அங்கு பணிபுரிந்த சுமார் 4000 ஊழியர்களும் காவல்துறையினர் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர். அந்த நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன.
மேலும் அடுத்த ஷிப்ட் பணிக்கு வந்த ஊழியர்களை, நிறுவனத்துக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அந்த நிறுவனத்தின் முன் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

போலீசில் புகார்
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக வட்டாட்சியர் ரவிச்சந்திரன், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் 5 நிறுவனங்கள் மீதும் தேர்தல் ஆணைய உத்தரவை மீறி செயல்பட்டதாக புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் அந்த 5 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிசிஎஸ்
அதே போல சிறுசேரி மற்றும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள டிசிஎஸ் அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். இதையடுத்து இங்கு ரெய்ட் நடத்திய தொழிலாளர் துறை அதிகாரிகள் ஸ்பென்சர் பிளாசா அலுவலகத்தைப் பூட்டினர்.

வழக்குப் பதிவு
நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், தேர்தல் ஆணைய உத்தரவை மீறியதாக 10 ஐடி நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications