ரொம்ப ஓவரா குளுருதே.. மழை கண்டிப்பா வருமா சார்...?

வானம் மேகமூட்டமாக இருக்கிறது. ஆனால் இரவுக்கு மேல் மழை வரலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கிறார்கள்.
அதேசமயம், சென்னையில் கடந்த சில நாட்களாகவே நல்ல குளிர் காற்று வீசுகிறது. இரவு நேரங்களில் ஏதோ பனிக்காலம் போல ஜில்லென்று குளிர்கிறது. மின்விசிறியை புல் ஸ்பீடில் வைத்துத் தூங்க முடியவில்லை. ஏசி போட முடியவில்லை.
தற்போது கடந்த சில நாட்களாக பகலிலிலும் கூட குளிர்கிறது. இதனால் வாகனங்களில் போகும்போது காதுக்குள் ஊடுறுவி இதயம் வரை ஜில்லிட்டுப் போகிறது. அப்படி குளிரடிக்கிறது. பனிக்காலத்தில்தான் வழக்கமாக இப்படிக் குளிரும். ஆனால் புயல் பக்கத்தில் வந்துள்ள நிலையில் இப்படிக் குளிருவது மக்களை குழப்பியடித்து வருகிறது.
ஒருவேளை ஏடாகூடமாக ஏதாவது நடந்து விடுமோ என்ற அச்சமும் மக்களின் முகங்களில் அப்பிக் கிடக்கிறது.
எஸ்.ஆர்.ரமணன் இன்று இரவு முதல் வட கடலோரப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்... சான்ஸ் கொடுத்து காத்திருந்துதான் பார்ப்போமே.












Click it and Unblock the Notifications