சென்னை பாரீஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள வணிகவளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
சென்னை பாரிமுனையில் ராசப்பா தெருவில் உள்ள 3 தளங்களை கொண்ட வணிக வளாகம் ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பெயிண்ட் கடை ஒன்றில் பற்றிய தீ மளமளவென மற்ற கட்டிடங்களுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 50 பேர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை. ஆனால், சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications