உங்களுக்கு இன்று லீவு.. ஜல்லிக்கட்டுக்காக போராடப் போய் வாருங்கள்.. வாவ் சிஇஓ!
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி, ஜல்லிக்கட்டுக்காக நடக்கும் போராட்டத்தில் தனது நிறுவன ஊழியர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக இன்று ஒரு நாள் அலுவலகத்திற்கு விடுமுறை அறிவித்து அனைவரையும் அசர வைத்துள்ளார்.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஜல்லிக்கட்டுக்காக தெருவில் இறங்கி உணர்ச்சிகரமாக போராடிக் கொண்டுள்ளனர். வயது வித்தியாசம் இல்லாமல் இளைஞர்களும், முதியவர்களும், பெண்களும், குழந்தைகளும், குடும்பம் குடும்பமாக போராடி வருவதை உலக அளவில் தமிழகத்தின் பக்கம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த கொவீனன்ட் கன்சல்டன்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஜோசுவா மதன் என்பவர், தனது நிறுவனத்திற்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார். தனது நிறுவன ஊழியர்கள் 500 பேரும் ஜல்லிக்கட்டு புரட்சிப் போராட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக இந்த விடுமுறையை அவர் அஏறிவித்து அசத்தியுள்ளார்.
ஒரு நாள் வருமானத்தை விட எனது மக்களின் போராட்டம்தான் எனக்கு முக்கியம் என்று அவர் கூறியுள்ளதுதான் முக்கியமானது.












Click it and Unblock the Notifications