சென்னை, புறநகர்களில் காற்றுடன் மழை.. வெப்பம் தணிந்து குளிர்ச்சி குடியேறியது!
Recommended Video
சென்னை: சென்னையில் இன்றும் மாலையில் நல்ல மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊரெல்லாம் வெளுத்து வாங்கும் மழையானது சென்னையில் இந்த முறை சற்றே வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது வந்து போகும் மழை விளையாட்டை மக்களும் வரும்போது வரவேற்று ரசித்து வருகின்றனர்.
நேற்று மாலையில் நகரின் பல பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது. அதேபோல இன்று மாலையும் தலைநகரத்தை நனைத்தது மழை.
நகரின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசான மழை காணப்பட்டது. முகப்பேர், வளசரவாக்கம், போரூர், மடிப்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. பாரிமுனை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது.
இதேபோல புறநகர்களிலும் மழை காணப்பட்டது. குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. திடீர் மழையாலும், காற்றாலும் வெட்கை தணிந்தது என்றாலும் கூட மழை வலுவாக பெய்யாத காரணத்தால் புழுக்கம்தான் அதிகரித்துள்ளது.