மழை ஒருபுறம், கண்ணீர் மறுபுறம்: பூ தூவி 'அம்மா'வை வரவேற்ற அதிமுகவினர்
சென்னை: கடந்த 27ம் தேதியில் இருந்து கவலையுடன் திரிந்த அதிமுகவினர் சிறையில் இருந்து வீடு திரும்பிய ஜெயலலிதாவை பார்த்ததில் இருந்து சிரித்த முகமாய் உள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த மாதம் 27ம் தேதி பெங்களூர் பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 17ம் தேதி ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து அவர் கடந்த 18ம் தேதி விடுதலையாகி சென்னை திரும்பினார்.
ஜெயலலிதாவை வரவேற்க சென்னையில் கொட்டும் மழையில் அதிமுகவினர் சாலையோரம் நின்றனர்.
சிறுவன்
அம்மா வருகிறார்கள் என்று எங்க அம்மா வந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் கொடுத்த கொடியை பிடித்திருக்கிறேன் என்பது போல் சிறுவன் காட்சியளிக்கிறான்.
சிரிப்பு
ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததில் இருந்து அழுத முகத்துடன் இருந்த அதிமுகவினர் முகத்தில் ஞாயிற்றுக்கிழமை தான் சிரிப்பை பார்க்க முடிந்தது.
கொண்டாட்டம்
சிறையில் இருந்து வந்த ஜெயலிலதாவை வரவேற்க வாகனங்களில் அதிமுக கொடியுடன் வந்த கட்சியினர்.
மழை
மழை பெய்தாலும் சொட்ட சொட்ட நனைந்தாவது ஜெயலலிதாவின் முகத்தை பார்த்துவிட்டு தான் செல்வோம் என்று நின்ற பாசக்கார பெண்மணிகள்.
தாத்தா
கண் சரியாக தெரியாவிட்டாலும், தள்ளாடும் வயதானாலும் சரி ஜெயலலிதாவை வரவேற்க வேண்டும் என்ற ஆவலோடு நின்றிருந்த முதியவர்.
ஜெயலலிதா
தன்னை காண மழையில் நனைந்து கொண்டு நின்றிருந்தவர்களை பார்த்து சிரிக்கும் ஜெயலலிதா.
நன்றி
ஜெயலலிதாவை பார்த்த அதிமுகவினர் அவரின் கார் மீது பூமாரி பொழிந்தனர். தன் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பை பார்த்து நெகிழ்ந்த ஜெயலலிதா.