சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை
சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
அயனாவரத்தில் 11 வயது வாய் பேச முடியாத சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கு இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த குற்றவாளிகளுக்கு சார்பாக வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வக்கீல்கள் சிலர் சேர்ந்து குற்றவாளிகளை தாக்கிய சம்பவமும் நடந்தது.இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். 17 குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வேண்டும். அரசு இதில் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகளை அரசு செய்திட வேண்டும். அந்த சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும். அதேபோல் சிறுமியின் கல்வி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications