எஸ்.வி.எஸ். கல்லூரி தாளாளர் வாசுகியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஹைகோர்ட்
சென்னை: 3 மாணவிகள் மர்ம மரணம் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.வி.எஸ். கல்லூரியின் தாளாளர் வாசுகியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்யப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அவர்கள் மூன்று பேரும் கொலை செய்யப்பட்டதாக கல்லூரியின் தாளாளர் வாசுகியே ஒப்புக் கொண்டார்.

இந்த வழக்கில் வாசுகி, அவரது மகன் சுவாகர் சர்மா, கல்லூரியின் முதல்வர் கலாநிதி, வாகன ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் வாசுகி, சுவாகர் வர்மா, வெங்கடேசன் ஆகியோர் ஜாமீன் கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் கோரினர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க மாணவிகளின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரிய வாசுகியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் சுவாகர் வர்மா மற்றும் வெங்கடேசனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இருவரும் தினமும் சிபிசிஐடி முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications