நித்தியானந்தா சீடர் நரேந்திரனை கைது செய்ய ஹைகோர்ட் உத்தரவு
நித்தியானந்தாவின் சீடர் நரேந்திரனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: மதுரை ஆதினமாக தன்னை அறிவித்து கொண்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத நித்தியானந்தாவுக்கு வாட்ஸ் ஆப் மூலம் கோர்ட் நிகழ்வுகளை அனுப்பிய சீடர் நரேந்திரனை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் 293-ஆவது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை எதிர்த்து மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அந்த மனுவிலும் நித்தியானந்தா தன்னை மதுரை ஆதினமாகவே அறிவித்துக் கொண்டார்.
இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும் 292-ஆவது ஆதினம் உயிரோடு இருக்கும் போது அதுபோல் நீங்கள் செயல்பட முடியாது என்பதால் அந்த பதில் மனுவை திருத்தி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதில் வாய்தா மேல் வாய்தா வாங்கினார் நித்தியானந்தா. இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அப்போதும் அவர் பதில் மனுவை திருத்தி தாக்கல் செய்யாமல் இருந்தார்.
இந்த வழக்கானது இன்று நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் மதுரை ஆதினமாக தன்னை அறிவித்ததை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் அது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காத நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவிடப்படும் என்று நீதிபதி கண்டித்தார்.
இந்த நிகழ்வுகளை கோர்ட்டில் இருந்தவாறே நித்தியானந்தரின் சீடர் நரேந்திரன் வாட்ஸ் ஆப் மூலம் தகவல்களை அனுப்பி கொண்டிருந்தார். அப்போது நீதிபதி மகாதேவனிடம் சிக்கிக் கொண்டார். அவரை கைது செய்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications