அரசுப்பணியில் இருந்தாலும் ஆஜராக வேண்டும்..தப்ப முயற்சிக்க கூடாது:கீதாலட்சுமிக்கு ஹைகோர்ட் சாட்டையடி
வருமான வரித்துறை சம்மனுக்கு எதிரான கீதாலட்சுமியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
சென்னை: வருமான வரித்துறை சம்மனுக்கு எதிரான எம்ஜிஆர் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. அரசுப்பணியில் இருந்தாலும் ஆஜராக வேண்டும் என்றும் தப்பிக்க முயற்சிக்க கூடாது என்றும் கீதாலட்சுமியை சென்னை ஹைகோர்ட் கண்டித்துள்ளது.
ஆர்கே.நகர் தொகுதியில் தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து அண்மையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். இதில் கீதாலட்சுமியை தவிர மற்ற மூவரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

வருமான வரித்துறைக்கு எதிர்ப்பு
ஆனால் வருமான வரித்துறை அலுவலகத்தில் கீதாலட்சுமி ஆஜராக மறுத்துவிட்டார். அத்துடன் தமக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

துணை இயக்குனருக்கு அதிகாரமில்லை
அதில் 'ஏப்ரல் 10-ந் தேதி (நேற்று) காலை 11.30 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், என்னால் நேரில் ஆஜராக முடியாது என்று கூறியதால், வருகிற 12-ந்தேதி நேரில் வரவேண்டும் என்று வருமானவரித்துறை துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், என்னை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட துணை இயக்குனருக்கு அதிகாரம் கிடையாது.

தடைவிதிக்க வேண்டும்
என் வீடு, அலுவலகத்தில் ஏப்ரல் 7 மற்றும் 8-ந் தேதிகளில் சோதனை நடந்தது. இந்த சோதனை முடிவதற்கு முன்பே, ஏப்ரல் 10-ந்தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று 7-ந்தேதியே சம்மன் அனுப்பியுள்ளனர். இது சட்டப்படி செல்லாது.மேலும், அந்த சம்மனில் எதற்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் அந்த சம்மனை ரத்து செய்யவேண்டும். எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்'. என கீதாலட்சுமி கோரியிருந்தார்.

கீதாலட்சுமிக்கு கடும் கண்டனம்
இந்நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கீதாலட்சுமியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசுப்பணியில் இருந்தாலும் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தப்பிக்க முயற்சிக்கக் கூடாது
கீதாலட்சுமி தப்பிக்க முயற்சிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உ்ரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கீதாலட்சுமிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications