பேசப்டாது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதித்த தடையை நீட்டித்தது ஹைகோர்ட்!
பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் பால் நிறுவனங்களை கட்டம் கட்டி குற்றம்சாட்டி வந்தார். ஆவின் பால் மட்டும் தான் ஆரோக்கியமானது என்ற அவர் டோட்லா, ஹட்சன், விஜய் உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் விநியோகிக்கும் பாலில் கலப்படம் செய்வதாக தெரிவித்தார்.

இதனால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதாகவும் கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்த தனியார் பால் நிறுவனங்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடைவிதித்தது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த சென்னை ஹைகோர்ட் தனியார் பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடையை நீட்டிதுத்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், தனியார் பால் நிறுவனங்கள் தங்களுடைய பால் மாதிரிகளை சோதனைக்கூடங்களில் ஆய்வுக்குட்படுத்தி, அதன் முடிவுகளை மூன்று மாதங்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications