கப்பல்கள் விபத்துக்குள்ளான விவகாரம்: மீனவர்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு வழங்க ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை அருகே கப்பல்கள் விபத்துக்குள்ளான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு வழங்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் விபத்துக்குள்ளான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு வழங்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பி.டபிள்யூ. மேப்பிள் என்ற கப்பலும், துறைமுகத்துக்கு உள்ளே வந்த எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற இரு கப்பல்களும் மோதி விபத்துக்குள்ளாயின.

இதில், எம்.டி.டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த எண்ணெய் டேங்க் சேதம் அடைந்தது. இதனால், எண்ணெய் கடல் தண்ணீரில் பரவியதால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டது.
கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் பரவியதால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி மீனவர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications