கப்பல்கள் விபத்துக்குள்ளான விவகாரம்: மீனவர்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு வழங்க ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை அருகே கப்பல்கள் விபத்துக்குள்ளான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு வழங்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் விபத்துக்குள்ளான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு வழங்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பி.டபிள்யூ. மேப்பிள் என்ற கப்பலும், துறைமுகத்துக்கு உள்ளே வந்த எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற இரு கப்பல்களும் மோதி விபத்துக்குள்ளாயின.

இதில், எம்.டி.டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த எண்ணெய் டேங்க் சேதம் அடைந்தது. இதனால், எண்ணெய் கடல் தண்ணீரில் பரவியதால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டது.
கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் பரவியதால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி மீனவர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications