அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பதிவுகளுக்கு தடை.. ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது. அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பதிவுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் அது தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு, அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய இடைக்காலத் தடை விதித்து கடந்த செப்டம்பர் 9ம் தேதி உத்தர விட்டது.
இந்தத் தடை உத்தரவால் பத்திரப்பதிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி ரியல் எஸ்டேட் சங்கத்தினர் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்தத் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று ஏற்கனவே ஐகோர்ட் கூறியுள்ள நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் அய்யாத்துரை கோர்ட்டில் ஆஜரானர். தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை கோர்ட்டில் அவர் தாக்கல் செய்தார்.
பின்னர், விசாரணையின் முடிவில் அரசு அங்கீகாரம் இல்லாத நிலங்களை பதிவு செய்வதற்கான தடையை நீக்க முடியாது என்று கோர்ட் திட்டவட்டமாக கூறியது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் கோர்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் எந்தெந்த நிலத்தை அரசு அங்கீகரிக்க தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த பின்னர் கோர்ட்டு இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications