சென்னைக்கும் வருதப்போய் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 2018ம் ஆண்டு.. ஜனவரியில்!
சென்னையில் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று சென்னை ஜல்லிக்கட்டு பேரவை அறிவித்துள்ளது.
சென்னை : தென் மாவட்டங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளது என்பது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம் எனலாம்.
ஜல்லிக்கட்டு என்றதும் அனைவருக்கும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தான் நினைவுக்கு வரும். அந்த மண் சார்ந்தவர்கள் மற்றும், சுற்று வட்டார கிராம மக்கள் மட்டுமே இதுவரை ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்திருப்பார்கள். மெரினா போராட்டத்தில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் ஜல்லிக்கட்டு போட்டியை இதுவரை டிவிகளில் மட்டுமே பார்த்திருப்பார்கள்.
சென்னையில், ஜனவரியில் நடந்த ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டம், புரட்சியாக மாறியது. ஜல்லிக் கட்டுக்கான தடை நீங்கியதற்கு, சென்னை மக்களின் போராட்டம் தான் விதையாக அமைந்தது. ஆனால், சென்னை மக்கள் பலருக்கு, ஜல்லிக்கட்டை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

'சென்னையில் ஜல்லிக்கட்டு'
ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வேண்டுமெனில் தென் மாவட்டங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்று இல்லை சென்னை சிட்டியிலும் பார்க்கலாம் என்று சென்னை ஜல்லிக்கட்டு பேரவை அறிவித்துள்ளது. அந்தப் பேரவை நிர்வாகிகளான ராஜசேகர், அமர்பிரசாத் ஹரி ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு கோவளத்தில் நடக்கிறது
இதன்படி 2018 ஜனவரி 6ம் தேதி கோவளம் அருகே, நுாறு ஏக்கர் பரப்பளவில், தனியார் மைதானத்தில், 'சென்னையில் ஜல்லிக்கட்டு' எனும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை துவங்கியவுடன், தமிழகத்தின் பல பகுதிகளில், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட, காளைகளுடனான விளையாட்டுகள் துவங்கிவிடும் என்பதால், அதற்கு முன்னதாகவே, இந்த போட்டி, சென்னையில் நடத்தப்பட உள்ளது.

ரூ.30 லட்சம் பரிசு
தமிழக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற சிறப்புமிக்க, 300 காளைகள் சென்னை ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ளன. 250 முதல், 300 சிறந்த வீரர்களும் பங்கேற்பர். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். போட்டியை, தமிழக முதல்வர் தொடங்கி வைக்க மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

இலவச பாஸ்
உச்சநீதிமன்ற உத்தரவு, தமிழக ஜல்லிக்கட்டு சட்டம் ஆகியவற்றை காக்கும் நோக்கில், போட்டியை காண, நிபந்தனைகளுடன் இலவச பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க, விளையாட்டுத் துறை சார்ந்த வல்லுனர்கள் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications