எம்ஜிஆர்.. கருணாநிதி.. ஜெயலலிதா.. என்ன ஒரு தொடர்பு.. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புதுச்சிறப்பு
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பல சிறப்புகளை கொண்டுள்ளது. இதுதான் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.
இந்த நிலையில் இன்று அந்த பேருந்து நிலையத்தில் இருந்த சென்னை புறநகர் பேருந்து நிலையம் (Chennai Mofussil Bus Terminus) என்ற பெயர் நீக்கப்பட்டது. இதற்கு பதிலாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

என்ன சிறப்பு
சென்னை புறநகர் பேருந்து நிலையம், பரவலாக கோயம்பேடு பேருந்து நிலையம் என்று அறியப்படுகிறது. இது ஆசியாவின் பெரிய பேருந்து நிலையம் ஆகும். ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதழ் பெற்றது இது. இது 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரே சமயத்தில் 270 பேருந்துகளை உள்ளே நிறுத்த முடியும். இது 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது.

கருணாநிதி தொடங்கியது
இது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டம் ஆகும். 1999ல் இந்த திட்டத்திற்கு கருணாநிதி இடம் ஒதுக்கினார். முதலில் ஜார்ஜ் டவுனில் கொண்டுவரப்படுவதாக இருந்து பின், கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. 38 ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டது. இவரது ஆட்சியில்தான் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானம் தொடங்கியது.

ஜெயலலிதா அடிக்கல்
அதன்பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இந்தபேருந்துநிலையத்தை திறந்தனர். பணிகள் நிறைவு பெற்று சென்னை புறநகர் பேருந்து நிலையம் (Chennai Mofussil Bus Terminus) என்ற பெயருடன் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

எம்ஜிஆர் பெயர்
இந்த நிலையில்தான் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இந்த பெயரை சூட்டி இருக்கிறது. திமுக, அதிமுக என்று தமிழகத்தின் முதுபெரும் தலைவர்கள் இந்த பேருந்து நிலையத்துடன் எதோ ஒரு வகையில் நெருக்கமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications